நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, October 14, 2015

"நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்"

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில், "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின்" விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக   "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ்   "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின், நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது"  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 


Saturday, September 12, 2015

இந்தியாவின் தேசத்தந்தையை அவமரியாதை செய்வதா?

இந்தியாவின்  தேசத் தந்தை என்று போற்றப்படும் திரு காந்தி அடிகளின் திரு உருவம் இந்திய ரூபாயில் பதிப்பது என்கிற முடிவெடுத்தபோது எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் நிரம்பி வழிந்தது.... அது ஒரு பெரிய கதை... சரி இப்போது அது நமது விவாதமல்ல.... பணமும் மனமும் என்கிற ருபாய் நோட்டின் மதிப்பு என்கிற "தன்னம்பிக்கை பயிற்சி" வகுப்பிற்காக ஒரு எடுத்துக்காட்டு கட்டுரையானது 1990-கலீல் உருவானது. நமது தமிழர் ஒருவர்தான் இதை மும்பை, தில்லி, நாக்பூர் போன்ற வட மாநிலங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளருக்குத் தேவையான தன்னம்பிக்கை பயிற்சியளிக்க இந்த பணமும் மனமும் -என்கிற உதாரண செயல் அறிவை பயன்படுத்தினார்,  அதாவது இந்திய ருபாய் நோட்டை கசக்கினாலும் காலில் போட்டு மிதித்து அழுக்காகினாலும் அதன் மதிப்பு குறையாது அதுபோலத்தான், நீங்கள் உங்களது பணியில் உங்களை யாரும் பொருட்படுத்தாமல் போனாலும் உங்களின் மதிப்பு குறையாது என்றார்" நம்மவர்கள் காப்பியடிப்பதில் சளைத்தவர்கள் இல்லை எனவே ஒரு வரிகூட பிசகாமல் அப்படியா இன்றளவும் அந்த உதாரண செயல் அறிவை பயன்படுத்திய பல பயிற்சியாளர்கள் திணறுகிறார்கள் காரணம் "காந்தியடிகள் படம் அச்சிட்ட பணத்தை காலில் மிதிப்படும்படி செய்து காட்டுவது சரியில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்ததினால் பயிற்சி தரவேண்டிய பயிற்சியாளர் முகத்தில் அசடுவழிந்தார்கள்.  இதைத்தான் நான் "பணத்தை மிதித்து அழுக்காக்கிக் காட்டுவதைவிட அதை மாற்றி பணத்தை குப்பைத்தொட்டியில் போட்டாலும் குப்பைத் தொட்டியின் நாற்றம்/வாடை வீசினாலும் பணத்தின் மதிப்பு குறையாது" என்று கூறுமாறு தன்னம்பிக்கை பயிற்சியளிக்கும் "பயிற்றுவிக்கும் -பயிற்சியாளர்"{TRAIN THE TRAINER} பட்டறையில் தெரிவித்துவருகிறேன்.  இதைக் கூறும்போதுதான் இந்தியத் தேசத்தந்தை எழுதிய இங்கிலாந்தில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் குறித்து இந்தியர்களைப்பற்றி எழுதியிருந்தது எனக்கு ஞபகத்தில் வந்தது ...... திரு காந்தி அவர்கள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது.... அன்று அவரது கல்லூரியில் அனைவருக்கும் ஆங்கிலப்பாடத்தின் தேர்வு முடிவுகளின் விடைத்தாள் வழங்கப்பட்டது. திரு காந்தி அவர்கள் 60% விழுக்காடிற்கு மேல் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தார். அவரது வகுப்பில் 15-20% விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருந்த ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, திரு காந்தி அவர்களின் அதிக மதிப்பெண் ஆச்சரியத்தை உண்டாக்க, அனைத்து மாணவர்களும் திரு காந்தி அவர்களிடம் சென்று "உங்களின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல, அதோடு நீங்களோ ஆங்கிலம் அல்லாது பல மொழிகள் பேசும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் அப்படி இருந்தும் எப்படி உங்களால் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறமுடியும்?" என்று கேள்விக்கேட்டனர்... அதற்க்கு திரு காந்தி அவர்கள் " இந்தியருக்கு மொழி ஒரு பொருட்டல்ல. எப்படிப்பட்ட  கடினமான மொழி மற்றும் பாடமானாலும் அப்படியே படித்து மனதில் நிறுத்து, தேர்வின்போது அப்படியே அச்சுப்பிசகாமல் விடைத்தாளில் எழுதிவிட்டு (வாந்தியெடுத்துவிட்டு) வருவதில் வல்லவர்கள்" என்றார் .... இங்கிலாந்து மாணவர்கள் இப்படியும் ஒரு திறமையா என வியந்தனர்..... இது காந்தியடிகளின் சுய சரிதையில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தி ....நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்.  

Wednesday, September 2, 2015

"பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-


பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கையை தூக்கினர். பிறகு அதே  நோட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பிறகு அந்தக் குப்பைத்தொட்டியிளிருந்து எடுத்து, முகர்ந்து பார்த்து நாற்றம் வீசுவதோடு அழுக்காகிவிட்டது என்று கூறி அனைவரிடமும் காட்டினேன். அப்போதும் அனைவருக்கும் அந்த நோட்டு பிடிக்கும் என்று, மீண்டும் அனைவரும் கையை தூக்கினர்.

'நோட்டு கசக்கப் பட்டு, குப்பையின் நாற்றம் வீசும் நிலையில் அழுக்ககிவிட்டதே, இந்த நிலையிலும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது ' என்று கேட்டேன்.

'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அழுக்கானாலும், குப்பைத்தொட்டியில் விழுந்தாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்'  என்றார் .

'சரியாகச் சொன்ணீ ர்கள்' என்றேன்,  அதுபோல தன் திறமையின் மதிப்பை (1000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மதியாமல் தூக்கி எறிதல் போன்ற நிலை) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி இருக்கும் வரை  (அதாவது மனது (கிழியாமல்) உடைந்து போகாமல் இருக்கும் வரை) தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது. .....இது ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன் அவர்களின் அனுபவ  வாழ்கை பொன் வரிகள். 

Saturday, August 22, 2015

ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பகுதியில், ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதர்க்குத்தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனத்தில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்க வேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலர், லாபம் கிடைத்தவுடன் உடனே செலவு செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். கல்லாவில் சில்லறை சேர்ந்தவுடன் ஒரு ஓட்டல் முதலாளி அதனை எடுத்துக் கொண்டு காணாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இதுவும். இடத்துக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பாக்கி, வங்கிக் கடன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மிச்சமிருப்பதை சேமிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். மிகச் சிறு பகுதி மட்டுமே செலவுகளுக்கு.

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு பணம் ஈட்டியவர்களையும் நம்பமுடியாத அளவுக்கு அவற்றைத் தொலைத்தவர்களையும் நான் கண்டிருக்கிறேன். செல்வம் என்பது கையை விட்டு செல்லக் கூடிய ஒரு கருவி. தக்க வைத்துக் கொள்ளும் சூத்திரம் அறியாதவர் எவ்வளவு ஈட்டினாலும் பிரயோஜனம் இல்லை. சிறு லாபம் வந்தவுடன் நிலை தடுமாறி வாழ்க்கைத் தரத்தை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளும் பெரும்பாலோரை நான் கண்டிருக்கிறேன். தொழிலிலிருந்து வரும் நிகர லாபத்தின் ஒரு பகுதி அந்தத் தொழிலை மேம்படுத்துவதற்குச் செலவு செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு மிக அவசியம்.

நாற்பது வயதுக்குமேற்பட்ட பலரும் பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு. ‘நான் கூட சிறிது காலம் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், அத்தோடு விட்டுவிட்டேன்.’ எந்தவொரு தொழிலையும் நின்று, நிதானித்து, நிலைத்து நிற்கும்படி தொடர்ந்து நடத்துவதில்தான் திறமை அடங்கியுள்ளது. சிறிது காலம் அதைச் செய்தேன், சிறிது காலம் இதைச் செய்தேன் என்று சொல்பவர்கள் தொழிலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு மேம்போக்கான உந்துதலில் தொடங்கி இருப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் தொழில் ஆர்வத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கிட முடியாது.

உலகளாவிய அளவில் நிர்வாகவியல் குறித்து ஆய்வுகள் நடத்தியிருப்பவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இது. ஒரு தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் அந்தத் தொழிலை நடத்துபவர்தானே தவிர, அந்தத் தொழிலால் ஏற்படும் இடர்பாடுகள் அல்ல. முன்பெல்லாம் பிசினஸில் இறங்கவேண்டுமானால் ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவு (Technical expertise) மட்டும் போதும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ நேர்மையான எண்ணம், நிர்வாகத் திறமை, பிரச்னைகளைக் கையாளும் விதம், கடுமையான உழைப்பு, சமூக அக்கறை ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வண்ணமயமான விளம்பரங்கள், பகட்டு வார்த்தைகள், ஆடம்பரமான மக்களைக் கவரும் உத்திகள் போன்றவற்றைச் செய்துதானே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன? சற்று முன் பார்த்த அம்சங்கள் எங்கே இருக்கின்றன? என்றால், என் பதில் இதுதான். உண்மை, உழைப்பு, உறுதி ஆகியவை நம் வசம் இருந்தால் நம் முயற்சி முழு வலிமையுடன் நிச்சயம் வெற்றியடையும். மற்றபடி, பொய்மையும் போலித்தனமும் நிச்சயம் ஒருநாள் நம்மைக் கீழே இழுத்துவிடும்.

இன்று மக்கள் வேகமாக முடிவெடுத்து ஒரு பொருளையோ ஒரு நிறுவனத்தையோ நம்பிவிடுகிறார்கள். அதே போல், மிக எளிதாக தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டும் விடுகிறார்கள். உண்மைத்தன்மை இல்லாவிட்டால் எந்தவொரு நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. அதனால் தரமான பொருளையோ, சேவையையோ மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபடுவோரது கடமையாகும்.

ஒரு தொழிலில் ஈடுபடுபவரின் பிரச்னையும் மன உளைச்சலும் அந்த அனுபவத்தைப் பெற்றவர்களால் மட்டுமே உணரமுடியும். பொதுவாக நமது சமுதாயத்தில் பிசினஸ் செய்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர்களே அதிகம். அவர்களுக்கென்ன பிசினஸில் பணம் அள்ளி எடுக்கிறார்கள் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுடைய ஏக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிலில் முழுக்கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம்.

தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.

வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.

தகுதியான நபர்கள் இல்லாமல் எந்தவொரு தொழிலையும் நடத்தமுடியாது. உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அவருக்குரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதில் எந்தவித தயக்கமோ, உணர்வுப் பிரச்னையோ எழக்கூடாது. பரவாயில்லை, பொறுக்கலாம் என்று தவறுகளைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கினால் அதுவே அந்தத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் ஒரு சில தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக நம்பி விடுவார்கள்.

எந்தவொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு அதை நீங்கள் தனி நபராகச் செய்யப்போகிறீர்களா அல்லது கூட்டுத் தொழிலாகச் செய்யப்போகிறீர்களா என்பதைப் பற்றித் தீர்மானமான, தீர்க்கமான முடிவை எடுப்பது மிக அவசியம். தனிப்பட்ட நட்பு வேறு, தொழில்முறை உறவு வேறு. இதைப் புரிந்துகொள்ள தவறினால் மன உளைச்சல் பெருகும்.

உடன் இருப்பவர் உழைப்பாளியா அல்லது சுகவாசியா, நேர்மையானவரா அல்லது போலியா, லாபத்தில் மட்டும் பங்கேற்பவரா அல்லது நஷ்டங்களிலும் உடன் இருப்பவரா, பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவரா அல்லது ஓடிவிடுபவரா போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள்மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக அவர் இருப்பது நல்லது.

கவனம், ஒரு தொழிலைத் தொடங்குவதில் மட்டுமல்ல, இழுத்து மூடுவதிலும்கூட சட்டச் சிக்கல்கள் உள்ளன. தொடரவும் முடியாமல் மூடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டு செய்வதறியாது நிற்கும் நிலையைத் தடுக்கவேண்டும். ஒருவர் தங்களுடைய சொந்த லாப, நஷ்ட பிரச்னைகளால் சுய தொழிலிலிருந்து விலகினால், பலர் வேலையிழந்த தடுமாறுவார்கள் அல்லவா?

சிறு தொழில் ஒன்றை மேற்கொள்பவரை வட்டத்துக்குள் இருக்கும் ஒரு புள்ளியோடு ஒப்பிடலாம். முதலில் அவரால் ஒரு சிறு குழுவுக்கு (team of employees) வேலை வாய்ப்பு கிடைத்து பலன் பெறுகிறார்கள்.

அடுத்து, அவருடைய தொழிலுக்குத் தேவையான கருவிகளையோ உபரிப் பொருளையோ மூலப் பொருள்களையோ வழங்குபவர்கள் (suppliers) பலன் பெறுகிறார்கள். அவர்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைகிறது. அடுத்த கட்டமாக, தொழில் செய்பவர் தான் உற்பத்தி செய்யும் பொருளையோ (finished products) அல்லது சேவையையோ (services) சமுதாயத்தின் முன் வைக்கின்றனர். பிறகு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்கள் (customers) உருவாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழில் உருவாவதால், அந்த இடத்தைச் சுற்றி பல சிறிய பெரிய அனுகூலங்கள் உருவாகின்றன.

உதாரணமாக, சிறு தொழில் நடத்தும் இடத்துக்கு அடிக்கடி பொருள்கள் வந்து போக வேண்டிய நிலை இருந்தால், அந்தத் தொழிலதிபர் சாலைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியவராக மாறிவிடுகிறார். தனது சுயலாபத்துக்காகவும் தொழில் முன்னேற்றத்துக் காகவும்தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்றாலும் அவருடைய சுயநலன் பொது நலத்துக்கும் உகந்ததாக மாறிவிடுகிறது. அதே போல் அவர் செலுத்தும் வணிக வரி, வருமான வரி போன்றவை மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகுகிறது. நல்லப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. தகவல் நன்றிகளுடன் திருவாளர் மைதிலி "பெண்மை.காம்"

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும்.

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும். வருகிற ஜூலை-2015, 11 மற்றும் 12 ம் திகதி அன்று தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்த சுகுணா கல்யாண மண்டபத்தில், சென்னையை சேர்ந்த குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் "கோவை -முதலீடு எக்ஸ்போ -15" (Invest Xpo'15, a national-level exhibition and seminar on investment and business opportunities) என்கிற முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்பிற்கான, தேசிய அளவிலான வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள் நடக்கும் கோவை முதலீட்டு கண்காட்சியில் சுமார் 40 அரங்குக் கூடங்கள் அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் (Mr. V.J.Gopalan, Chairman and Chief Executive) அவர்கள் குறிப்பிடுகையில், இதேபோன்ற ஒரு கண்காட்சியை பொள்ளாச்சியில் நடத்தியபோது மிகப்பெரிய வரவேற்ப்பையும், அனைவருக்கும் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதொடு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வர்த்தக கண்காட்சி அமைந்திருந்ததால், பலர் முதலீடு செய்ய ஆர்வத்தோடு முன்வந்ததை போலவே கோவையிலும் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்,

மேலும் முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்விதமாக, மாநிலத்தின் நிலை-II மற்றும் நிலை-III நகரங்களில் இது போன்ற முதல்லீட்டாளர் கண்காட்சிகளை நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

செபி-SEBI மற்றும் தேசிய பங்குச் சந்தை-NSC (National Stock Exchange) மற்றும் பல் பொருள் பரிவர்த்தனை மையம்-MCX(Multi Commodity Exchange) போன்ற பங்குச் சந்தை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்குச்சந்தை வல்லுனர்கள் என பலர், கண்காட்சிக்கு வருகைதரும் முதலீட்டாளர்களுக்கு, சந்தை முதலீடுகள் சார்ந்த கல்வி புகட்டுவது மற்றும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி, கோவையின் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தக்கண்காட்சி அமையும் என்று நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். http://www.investexpo.in/who-we-are.php

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பெரிய அளவில் ஒரு சர்வதேச கண்காட்சிக்கான திட்டமிடுதல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு, மேலும் அந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்துவதர்க்கான எளிய வழிமுறைகள் பற்றிய குறிப்புகளோடு, சுவையான பல அனுபவங்களையும் தெரிந்துகொள்ள எனது "முகநூளின்- நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பட்டறைக்கு" வருகை தாருங்கள் "www.facebook.com/Programmedirectors"

“உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”

பழைய நினைவுகளில் சென்னை புத்தகக் கண்காட்சி :-அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். .......
எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.

“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.

சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.

அதற்கிடையில், “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலும்.
இதைக் கேட்டதும், “ என்னடா இது.. இந்த இடத்தில் இப்படியா?” பழைய புத்தகமா? இங்கே எங்கே பழமைவாய்ந்த அந்த மூர் மார்கெட் வந்தது, என்று எண்ணத் தோன்றியது. இதற்க்கான விடையை கண்காட்சியின் இறுதியில் தெரிந்துகொண்டேன்.

கண்காட்சியைச் சுற்றிப் பார்த்து வேண்டியதை வாங்கி முடித்ததும், கிளம்பினோம். ஆட்டோவில் கிளம்பி யூ வளைவில் திரும்பிதும், கண்காட்சிக்கு நேர் எதிர் சாலையில் ஏகப்பட்ட கூட்டம். என்ன விற்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து போது, ஆச்சரியமாக இருந்தது. மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருந்தனர். கண்காட்சியில் பங்கு கொள்ள முடியாத கடைக்காரர்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. பழைய புத்தகங்களை அங்கே குவித்திருந்தனர். கடைக்காரர்கள் பலரும் இந்த பன்னிரண்டு நாட்களில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தவற விடக்கூடாது என்று தங்களிடம் இருப்பில் இருந்த பழைய புத்தகங்களையெல்லாம் கொண்டு வந்து கடை விரித்திருந்தார்கள். அங்கும் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆரம்பத்தில் கேட்ட “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலில் எந்தவிதத் தவறும் இருந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.

கண்காட்சியின் நிகழ்ச்சி நிரலில், ஓவியப் போட்டியும் பேச்சுப்போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதைக் கண்டேன். இந்தப் போட்டிகளின் நடுவே, வாசகர் போட்டியையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து சில அறிய, பெரிய, மறக்கமுடியாத, வாழ்க்கைக்கு உபயோகமான வரங்களைப்பற்றி பேசுவது மற்றும் எழுத்தாளர்களின் புதிய புத்தகம் ஒன்றைப் படித்து அதன் விமர்சனத்தைத் தருவதோ கூட சுவையானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம்

பத்திரிகை செய்தி (Wednesday, June 24, 2015), தினமணி,- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ விழா ஒன்றில், இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை யாரும் கவனிக்காத நிலையில், நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில்தான் இந்த விஷயமே தெரிய வந்துள்ளது.
..விளைவு அந்த விழா ஏற்பாடு செய்த இராணுவ அதிகாரியிடம் விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம் காஷ்மீர் மாநில தலைமைச்செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆகவே ஒரு அரசு விழாவின் நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் திறம்பட அந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவு அவசியம் தேவை.

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் "கூறியது கூறல் என்பது

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் "கூறியது கூறல் என்பது வானொலிக்கு மட்டுமின்றி தொலைக்காட்சிக்கும் பொருந்தும்" குண்டு வெடித்தது என்பது "குண்டி" என்று தவறாக வெடித்துவிட்டது .......

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!
பெண்களிடம் இயல்பிலேயே நிர்வகிக்கும் திறனும், ஒருங்கிணைக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அந்தத் திறனைச் சரியாகச் செயல்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சி மேலாண்மை(Event Management) துறையில் சாதிக்கலாம் என்கிறார் ‘ஸ்வதேஷ் ஈவன்ட்ஸ்’ நிர்வாகி ஷியாமளா ரமேஷ்பாபு. இவர் இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இயங்கிவருகிறார்.

அடிப்படையில் பள்ளி ஆசிரியரான ஷியாமளா, இந்தத் துறையில் நுழைந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. “என் அம்மாவின் சிகிச்கைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது நான் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே என் பள்ளி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன்.

என் அம்மாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் டி.ஜி. பாலச்சந்தர் என் ஒருங்கிணைப்புப் பணியைப் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு மருத்துவ மாநாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதை நான் வெற்றிகரமாகச் செய்துமுடித்த பிறகுதான், நிகழ்ச்சி மேலாண்மையில் எனக்கு இருக்கும் திறமையை நான் உணர்ந்தேன்” என்கிறார் ஷியாமளா.

சவாலை சமாளிக்கலாம்

அதற்குப் பிறகு மருத்துவ மாநாடுகள், பெருநிறுவன நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தபடியே நிர்வகித்துவருகிறார் இவர். நிகழ்ச்சி மேலாண்மை என்பது சவால்கள் நிறைந்தது. சவால்களை விரும்பும் பெண்களுக்கு இந்தத்துறை பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்கிறார் இவர்.

“இந்தத் துறையில், 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறைய தொடர்புகளை உருவாக்குவது, எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பது, அவர்களது தேவைகளை முடியாது எனச் சொல்லாமல் முடிந்தவரை நிறைவேற்றுவது எனப் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தத் துறையில் பேரார்வம் இருந்தால் இதையெல்லாம் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஷியாமளா.

நிகழ்ச்சி மேலாண்மையில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில், எதற்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று தெரிந்துகொள்வது முக்கியம். “நான் கல்லூரி நாட்களிலிருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதனால், நான் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். இப்படி நம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தத் துறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.

அதே சமயம், எல்லா வேலைகளையும் நாமே நிர்வகித்துவிட முடியும் என்றும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் யோசித்துவைத்திருக்க வேண்டும்” என்கிறார் ஷியாமளா.

தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் இன்னும் நல்லது என்கிறார் இவர். “தன்னிச்சையாக உடனடியாக முடிவெடுக்கும் திறன் இந்தத்துறைக்கு மிகவும் அவசியம். உடல்நிலையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது, எப்போதும் இன்முகத்துடனும், நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். எனக்கு என் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால் என்னால் இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது” என்கிறார் ஷியாமளா. (The Hindu: May 31, 2015 11:34)

Friday, October 3, 2014

நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ? .....


நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ? .....

"இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 32 வயது வாலிபர் ஒருவர் சுட சுட இட்லி தின்னும் போட்டியின்போது இறந்துபோனார் "......சென்ற வாரம் தென்னிந்திய கேரளா மாநிலத்தில் நடந்த சுட சுட இட்லி தின்னும் போட்டி ஒன்று சோகமாக முடிந்தது "போட்டியில் கலந்துகொண்ட ஒருவருக்கு போட்டியின்போது  இட்டிலி தொண்டைக்குழாவில் அடைத்துக்கொண்டு இறந்துபோனார்" அந்த நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி பொறுப்பாளர் மற்றும் அந்த நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிய அந்த ஊரின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியானார்கள். காரணம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்களான மருத்துவ முன்னேற்ப்பாடு ஏதும் செய்யாத காரணத்தாலும் முறையான காவல்துறை அனுமதி பெற தவறிய காரணத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக இருப்பதோடு, குற்றம் உறுதி செய்யப்பட்டால் அதற்க்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்ப்படும். 

எந்த போட்டிக்கும் அதில் கலந்துகொள்ள பெயர் தருவதற்கும்,  அதில் கலந்துகொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான விவரங்கள் உள்ளது. முதலில் அதைப்பற்றி கேட்டு தெரிந்துகொண்டு பிறகு அந்த போட்டியில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும் ...

நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை .... அதற்க்கென்று சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு கடைபிடிக்கப்படவேண்டியது அவசியம்.  

எந்த ஒரு நிகழ்ச்சியும் திட்டமிடுவதற்கு முன்பு :-
$ முதலில் பாதக மற்றும் சாதக சூழ்நிலையைப்பற்றி அறிந்துகொள்ளுவது மிக முக்கியம். ஆங்கிலத்தில் "ரிஸ்க் அனலிசிஸ்" என்று கூறுவார்கள். காரணம் நகழ்ச்சி நடைபெறும் இடமும், நாளும் தேர்ந்தெடுக்கும் பொது அன்றைய தினம் விடுமுறை தினமாக அமையுமாறு திட்டமிடுவதோடு, நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அல்லது நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று... அடிதடி மற்றும் வேலை நிறுத்தம் போன்ற எந்த  ஒரு  அசம்பாவிதங்களும் நடக்காத தினமாகவும், இடமாகவும் அமையும்படி நிகழ்ச்சி நாளும் இடமும் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். 

$நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.
நிகழ்ச்சியின் போட்டியாலருக்கோ அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவருக்கோ எந்தவித ஆபத்தும் நேராதபடி அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது முகவும் முக்கியம்.

1. காவல்துறை மற்றும் தீ அனைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சிபற்றி தெரிவித்து முகூட்டியே அதற்க்கான அனுமதி பெறுவது அவசியம்.

2. முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் மருத்துவ நிலையத்தின் தொலைப்பேசி மற்றும் முதலுதவி சேவை பெற தேவையான அனைத்து விவரங்களையும் பெற்று தயார்நிலையில் வைத்திருப்பது முகவும் அவசியம்.  

3. போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், வசிப்பிடம் போன்ற விவரங்களுடன் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பவர்கள் முழுமையாக உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் போட்டியாளருக்கு தெரியப்படுத்தி, அந்த  விவரங்களை போட்டியாலரிடமிருந்து எழுத்துபூர்வமாக எழுதி பெறுவது மிக முக்கியமான ஒன்று.     

 $ நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும்  சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

$ நிகழ்ச்சியில் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொல்வதகவோ அல்லது தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தால், நிகழ்ச்சியை அரசு முறைப்படி நடத்தவேண்டும் ..  அதாவது நிகழ்ச்சியில் தேசியகீதம் மற்றும் தேசப்பற்று பாடல்கள் முறைப்படி அமையுமாறும் அரசாங்க வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிகழ்ச்சி அமையுமாறு ஏற்ப்பாடு செய்வதோடு,  அந்த விதி முறைகள் சரிவர கடைபிடிக்குமாறு நிகழ்ச்சியை நடத்திச்செல்லுவதும் மிக முக்கிகம்.

$ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்கள்,  பார்வையாளர்கள் அல்லது பொதுமக்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டியது அவசியம்.

இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாக்ம்.....  நன்றி.... தொடரும்... (கோகி).    

Saturday, August 3, 2013

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை.

நிகழ்ச்சி மேலாண்மை (event management) என்றொரு சுவாரசிய துறை.இருக்கிறது அதற்க்கென்று தனிப்பட்ட பட்டம் மற்றும் பட்டயப் படிப்பும் உள்ளது ...துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் திரு சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் திரு சந்திரா ரவி ஆகியோர் இணைந்து "ரிதம் ஈவன்ட்ஸ்" என்ற புதிய நிகழ்ச்சி மேலாண்மை (ஈவன்ட் மேனேஜ்மென்ட்) நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

.......வழக்கம்போல தனது அலுவலகத்திற்குள் நுழைந்த சங்கர், இடம் காலியாக இருந்த கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு (அவர்களின் தலை(மை)யில் கட்டிவிட்டு) , சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர்,.... அவரது சொந்த வீட்டு வேலையில் சிறு துரும்பைக்கூட நகர்த்தமாட்டாராம்.....

...இன்னும் தொடரும்......

ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


radio_jockey
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சமுதாய வானொலி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பெயருடன் வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொலைபேசி/கைபேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல் – 637 002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை namakkalkvkcrs@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பதாரர்கள் குரல் வளம், உச்சரிப்புத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு செய்தி சேகரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அவர்கள் சேகரிக்கும் செய்திகளுக்கு மற்றும் தொகுப்பாளராக பணியாற்றும் காலத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண் : 04286 – 266144.

Wednesday, May 1, 2013

உங்களின் சொந்த குரலில் வானொலி நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு...

உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.

உங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்றுகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும்..... எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

பல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-

#ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள் உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.

#வானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.

#நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.

#ஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.

# ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று "பின்புல" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்." மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், "வெறும் குரள்" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.

#வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த "மந்திரச்சொல்லாக" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் "சோப்பு" ஒன்று "புதிது" என்கிற ஒரு "மந்திர வார்த்தையை-KEY WORDS" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் "மந்திரச்சொர்க்களின்-KEY WORDS" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.

அடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.

வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

#வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.  பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை என்பது 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, தமிழகத்தின் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது. ஆகவே பண்பலை ஒலிபரப்பிற்கு, ஒலிபரப்பு கோபுரம் (ட்ரான்ஸ் மீட்டர் டவர்ஸ்) அவசியமாகிறது. இதே நிகழ்ச்சியை வானொலி தவிர அதன் இணைய வலைத்தொடர்பு (Internet) அமைப்பிலும் கேட்கலாம்.

ஆஸ்திரேலிய பண்பலையில் "வெட்டுப்புலி" என்கிற சிறுகதை நூல்கள்  குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது.




அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்: 
திரு.பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல், ஆகியோரக்ல் 
நூலின் பெயர் : வெட்டுப்புலி 
ஆசிரியர்: தமிழ்மகன் 
வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 
இணையத்தில் நூலினை வாங்க இங்கே சொடுக்கவும் http://uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=262


சிறு குறிப்பு:- வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், தமிழகத்தின் செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவலின் விலை இந்திய ருபாய் மதிப்பில் .Rs.220, சிங்கை வெள்ளியில் $5.00

Tuesday, April 30, 2013

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????

தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், "மே" தினம் போன்ற பலவகைப்பட்ட "தினங்கள்" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத ந...ிகழ்சிகள், "நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.

கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.

சரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.

வானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...

இப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை? தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா ????

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்...

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான ...இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.

ஆனால் ஒரு பிரபல தமிழ் பத்திரிகை 1977 -ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன்" டெல்லியை பவனி வந்தார்" அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977). விளைவு பத்திரிகை விற்பனை.

இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்.

ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

1.ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

#நீங்கள் புதியவர் என்றால் முதலில் உங்கள் நண்பர்கள் உதவியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு உங்கள் இருப்பிடத்திலேயே சிறு கண்காட்சி அமைக்க திட்டமிடுங்கள்.

# மாணவர்கள் அவர்களின் வகுப்பில் ஆசிரியரின் உதவியுடன் கண்காட்சி நடத்த திட்டமிடுங்கள். (நான் பகுதிநேர ஆசிரியராக இருந்த ஒரு பள்ளியில் மேல்நிலை வணிகவியல் மாணவர்கள் (வணிக...வியலில் கண்காட்சியா என கேட்குமளவிற்கு) அலுவலக மேலாண்மை பற்றிய கண்காட்சி நடத்தினார்கள், அலுவலகத்தில் எப்படிப்பட்ட வகை வகையான கோப்புகள் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிறிய அலுவலகத்தின் தேவைகள், அலுவலகம் எப்படி இருக்கவேண்டும் போன்ற பல விரங்களை கண்காட்சியாக மிகவும் அருமையாக செய்தனர்)

#அலுவலக ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் அவர்களின் தயாரிப்பு அல்லது அலுவலக மேலாண்மை அல்லது விற்பனை, கொள்முதல், இப்படி அவர்களின் அலுவலக செயல்கள் பற்றிய ஒரு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செய்யலாம்.

# தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பே சிறு வணிகர்களைக்கொண்டு உங்கள் பகுதியில் உரிய அனுமதிபெற்று ஒரு சிறப்பு கண்காட்சி ஏற்ப்பாடு செய்யலாம்.

#முக்கிய நிகழ்சிகளின்போது அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் அருகே, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட விர்ப்பனைக் கண்காட்சி நடத்தலாம். அதாவது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என.....

#வேலைவாய்பு கண்காட்சி "நிறுவனங்களை அணுகி அவர்களின் தேவைக்கேற்ப ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அந்த இடத்திற்கு வேலை தேடுபவர்களை வரவைத்து செய்யும் வேலைவாய்ப்பு கண்காட்சி.

இன்னும் இதுபோலே நூற்றுக்கணக்கான கண்காட்சி அமைப்பதற்கு தேவையான குறிப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் முதலில் நிகழ்ச்சி தயாரிப்பு திட்டமிடவேண்டும். அதற்க்கு முதலில் முக்கிய தேவைகளை ஐந்து பகுதிகளாக (தலைப்புகளாக) பிரித்து வகைப்படுத்திக்கொண்டு திட்டமிடுதலை தொடங்கவேண்டும். அது எப்படி என்பதை மேலும் தொடர்ந்து பார்ப்போம் ........

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

நாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.

எந்தெந்த வகையில் திட்டமிடுத...லும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-

நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.

#தொலைகாட்சி மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி? அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது?

# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது?

#ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.

#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.

#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம்.
...இன்னும் தொடரும்......

Saturday, April 27, 2013

நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்

"பல்துறைகளைச் சேர்ந்த - அனைவரது, நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்.-பதியப்படும் அனைத்து விவரங்களும், அனைவருக்கும் பொதுவானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும்"
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.