நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : February 2016

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, February 6, 2016

சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற...

இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற...

தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில் இயங்கிவருகிறது.  இந்த அரசு இலவசப் பயிற்சிப்பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.  IGNCA-இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் "சர்வதேச கதை சொல்லும் விழா" பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் நிவேஷ், அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரசு சாரா விழாவாக நடந்துவருகிறது. 

கலைக்குழு வைத்திருப்பவர்கள் இந்த தேசிய மையத்தோடு தொடர்புகொண்டு அவர்களது கலையை சர்வதேச அளவில் காட்சிப்படுத்த, இந்த தேசிய மையம் உதவி செய்து வருகிறது தினமும் மாலை  4 மணி முதல் 8 மணி வரை இந்த மையத்தின் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பட்டறையில் கலந்துகொண்டு அவர்களது திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். 

கதை சொல்லும் ஒவ்வொரு மாணவர்களும்  25 நிமிடங்களில் 2 கதைகள் சொல்லவேண்டும். திருமதி டாக்டர் மங்களம் சுவாமிநாதன் அவர்கள் கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைக்குப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். (Smt. Dr. Mangalam Swaminathan (Programme Director-Kaladarsana Division, IGNCA)

தொலைப்பேசியில் தொடர்புகொள்ள  91+011+23388155, 


இனைய முகவரி http://ignca.nic.in/

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.